இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுசீந்திரம்

"2000 ஏக்கர் பாசன வசதி பெறும் பரந்து விரிந்த வயல்வெளிகள், அலை அலையாக தென்னை மற்றும் பனைமரங்கள். மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இடையே மா, புளி, மருத, வேம்பு, வாழை மரங்கள். குளங்கள் குட்டைகள் ஆறு மற்றும் அதிலிருந்து பிரிந்து விரிந்து செல்லும் வாய்க்கால்கள், எல்லாவற்றிலும் மேலாக நெருக்கமாக பூத்துக் குலுங்கி கண்ணுக்கு குளிர்ச்சியான மலர்தோட்டங்கள்" என சுசீந்திரம் கோபுர உச்சியில் தான் பார்த்த அனுபவத்தை எழுதுகிறார் K.K.PILLAI அவர்கள். இப்போ ஏறி பார்த்தால் தெற்கில் ஒரு புறவழிச் சாலை, வடக்கே ஒரு புறவழிச் சாலை கிழக்கே இரண்டும் சேருமிடம். வடக்கே பெருநகரம், இதையெல்லாம் காணாதிருக்க சுசீந்திரம் கோபுரத்தை சுற்றி சுற்றி எழும்பிக் கொண்டிருக்கும் பலமாடி வீட்டுக் கட்டிடங்கள். இவையன்றி வேறொன்றும் இல்லை தாணுமாலயனே!

சுசீந்திரம்

1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்ய கரிகாலனால் கொல்லப்பட்ட வீரபாண்டியனின் 5 கல்வெட்டுகள் சுசீந்திரம் கோவிலில் மட்டுமே உள்ளன. அவைகள் அனைத்தும் கைலாசநாதர் கோயில் பாறையில் பொறிக்கப்பட்டவை. கோவிலில் விளக்கு எரிக்கும் நெய்க்காக ஆடுகள் வழங்கியதையும் நந்தவனத்திற்கும் அதை பராமரிக்கவும் நிலங்கள் வழங்கியதையும், சில வெற்றி குறிப்புகளும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. வீரபாண்டியன் தலை வைத்திருந்த ஐஸ்வர்யா ராயை பற்றிய கல்வெட்டு கிடைக்காது. அது கல்கியின் கற்பனை.

சுசீந்திரம்

படம்
திருவாடிப் பூரம். சுசீந்திரம் முன்னூற்று நங்கை அம்மன் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் கல்வெட்டு. கிழக்கு நுழைவாயிலின் இடது புறத்தில் உள்ளது. இது இங்கிருந்த தேவதாசிகள் சமுக அந்தஸ்தை குறிப்பதோடு திருநாள் ஆடிப்பூர செய்திகளை சொல்கிறது. கொல்லம் 817 (கிபி 1631) சிவிந்திரமுடைய நயினார் கோவில் தெய்வக்கன்னிகளில் சிறப்புக்குடி மூத்தகுடி இடப்பாகம் மகள் மாதம்மைக் குட்டி இக்கோவிலில் உள்ள பாரி சைவருக்கு வயல்கள் எழுதிக் கொடுத்ததை கூறுகிறது. தேருர் பத்தில் எழுதிக் கொடுத்த வயல்களின் வருமானத்தில் முன்னூற்று நங்கைக்கு திருவாடிப் பூர நாள் சிறப்பும், திருவூசலும் பெரிய தேர் வீதி வளைய எழுந்தருளும் திருநாள் செலவுக்கு என்று குறிப்பிட்டு உள்ளது. தேரோட்டம் நடந்ததாக வேறெங்கும் குறிப்புகள் இல்லை. ஆனால் அம்மன் பெரிய தேர்-வீதியில் (ரதாவீதி) வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நிகழ்ந்து இருக்கிறதையே அது குறிக்கிறது.  ஆடிப் பூரம் அன்று அம்மனை திரு ஊஞ்சலில் வைத்து ஆட்டும் வைபோகமும் ஊசல் பிடிக்கும் பெண்களுக்கு பரிவட்டம் கட்டுவதையும் தெளிவாகக் காட்டுகிறது. 400 வருடங்களுக்கு முன் பெண்களுக்கான சிறப்பு அது. கிபி 1040 கன்னியா...

சுசீந்திரம்

சுசீந்திரம் கோவிலில் காணக்ககிடைப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமாக மன்னர் மற்றும் அரசுகளின் பெயர்கள் இல்லாத பல கல்வெட்டுகள், 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதிகள். இந்த நேரங்களில் இப்பகுதி விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்கர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருந்தது. "சதா சேர்வை" என காணக்கிடைக்கும் கல்வெட்டுகள் இவர்கள் காலத்தியவை. ஆனாலும் இவர்கள் இக்கோவிலுக்கு செய்த கலைக் கொடைகள் அபரிமிதமானவை. கோவில் கோபுரத்தின் அடிப்பக்கம் விஜயநகர மன்னர் காலத்திலும், மாக்காளை கருடாழ்வார் மற்றும் கிழக்குப் பிரகாரம் திருமலை நாயக்கர் காலத்திலும் அமைக்கப் பட்டுள்ளது. தெப்பகுளத்தின் வடக்குப் பகுதி நிலங்களில் நாயக்கர் மடம் அமைத்து இருந்தனர். அதை திருவாவடுதுறை மடத்திற்கு ஒப்படைத்து அதோடு அதிக இடங்களில் நிலங்களையும் ஒப்படைத்து சமயப்பணி வளர்த்தனர். அதேபோல் நான்கு ரதவீதிகளை விரிவுபடுத்தியது நாயக்கர் காலத்தில், அதை ஒட்டியே இங்கு திருவிழாக்களில் தேர் ஓடிய வைபவம் நிகழ்ந்து இருக்கும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் ஆடிப்பூரத் தேர் நிலை நின்ற பிறகு மதுரை வரை வேட்டுகள் போட்டு நாயக்க மன்னர்களுக்கு செய்தி சொன்னத...

சுசீந்திரம்

மா. சிதம்பர குற்றாலம் பிள்ளை 1940 இல் எழுதிய சுசிந்தை மான்மியம் நூலில் இருந்து; திருமலைநாயக்கன்‌ இயற்றிய திருப்பணி. தன்பெரிய படையுடனே மதியும் நல்‌விதியும்‌  சார்ந்திடவோர் அரசனாய்ச்‌ சாற்றிய வந்நாய்க்கன்‌  முன்பெரிய மதுரையெனு முதுநாட்டை ஆண்டு  முக்கணூறு சொக்கரடி முறையேத்தி நின்று  வன்பெரிய நாய்க்கர்தம்‌ மாப்படையாற்‌ பொருது  மாநாடு பலசேர்த்து வள நாஞ்சில்‌ நாட்டின்‌  மன்பெரிய சுசீதையெனும்‌ மாப் பதியின் ஊற்று  மகிழ்ந்து இனிது தானுறைய மாளிகை ஒன்று அமைத்தான்‌.  அந்த மாநாய்க்கனேவால் அமைத்த  அணியுறு மாளிகை அதனிற்‌  சொந்தமாதரோடு உறையும் நாள் இறைவன்‌  அறக்கமா வாயிலைத் திறக்கும்‌  முந்துமாத்‌ தனுவே (ஏ)காதசி வரத்தன்‌  முதல்வனாம்‌ அழகனை நினைந்து  இந்த மாச்‌ சுசிந்தை ஆலயத்து எழுந்த  எம்பிரான் இணையடி தொழுந்தான்.

சுசீந்திரம்

"ஒரு அறுசமயக் கோவிலும், CCTV கேமரா கடவுளும்."            - முத்துசுவாமி மகாதேவன். "உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" - திருமூலர். உடல் இருக்கும்வரை தான் உயிருக்கு மதிப்பு என்பது மனிதகுலத்தின் நியதி மட்டுமல்ல கடவுளாருக்கும் பொருந்தும்.  வேதங்களை ஏற்றுக் கொண்ட இந்து மதத்தின் ஆறு சமயங்களாக ஆதி சங்கரர் கூறுவது, கணபதி வழிபாட்டை கொண்ட "காணபத்யம்", முருக வழிபாட்டைக் கொண்ட "கௌமாரம்" சக்தி வழிபாட்டைக் கொண்ட "சாக்த்தம்", சிவ வழிபாட்டை கொண்ட "சைவம்" திருமாலைக் கொண்ட "வைணவம்" மற்றும் தன் ஒளியாலும் சக்தியாலும் இவ்வுலகை படைக்கும் சூரியனை கொண்ட "சௌரம்" பல இடங்களில் ஓரிரு சமயங்கள் சிறப்பாக இருந்தாலும், அறுசமய வழிபாட்டு தெய்வங்களும் ஒன்றாக காட்சி அளிக்கும் கோவில் தான் சுசீந்திரம். மும்மூர்த்திகள் ஒன்றாக காட்சி தரும் தலவரலாறும், அம்மனோடு சிவன் விஷ்ணு கணபதி முருகன் சூரியன் உட்பட தனித்தனி சன்னதிகளும் கொண்ட கோவில் அமைப்பு இங்குள்ளது. அறுசமயத்தின் ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது இக்கோவில். சூரியன் எங்கிருக்கிறார் இக்கோவிலில் எ...

கனிவும் உண்டு வாழைக்கு

கனிவும் உண்டு வாழைக்கு! எண்பதுகளின் இறுதிகாலம். இரண்டு ரூபாய்க்கு அரை சாக்கு வாழைக்காய் கிடைக்கும். சுற்றத்தாருக்கு மட்டும் வியாபாரம் செய்வாள் பக்கத்து வீட்டு முத்தம்மை ஆச்சி. பெரும்பாலும் பாளையம்கோட்டை, ஐந்தாறு ரசக்கதலி, ஓரிரு மோரீஸ், சிங்கன், மொந்தன், தொழுவன், செந்தொழுவன், பேயன், பேயனில் சக்கைப்பேயனை விட நாட்டுப்பேயன் அதிகமிருக்கும் நாட்டுப் பேயனில், பழத்தை தின்றுவிட்டு தொலியில் இருக்கும் மெல்லிய உள்ளடுக்கு ஒன்றை இளக்கித் தின்னலாம். சிலர் தொலியின் உட்பக்கத்தை வாயில் வைத்து அப்படியே திம்பர். தூரத்தில் இருந்து பார்த்தால் , "இவன் ஏம்டே தொலியை திங்கிறான்?" என்றிருக்கும்.  இத்தனையும் கதம்பமாய் வாங்கிச் சென்று வீட்டில் வைத்திருந்தால் ஒவ்வொன்றாக பழுக்க ஆரம்பித்து விடும். பழுக்க பழுக்க தின்பது ஒன்றே அன்றைய ஸ்நாக்ஸ். அடிபட்டது ஒன்றிரண்டு, வெடிப்பு சில என்றிருக்கும் அருவாமனையில் கீறி போட்டுவிட்டு திங்க வேண்டியது தான்.  முதலில் பாளையங்கோட்டை மஞ்சள் நிறமடிக்கும். ஒருவித புளிப்புச் சுவையுடைய பழம். நோயெதிர்ப்பு சக்தி அதிகம் என்பார்கள். ஒரு காலத்தில் தின்னு தின்னு புளிச்சுப் போன பழம் அதுத...