இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்ரா பவுர்ணமியும் குமரியும்

எதேட்சையாக அமைந்தது என்றாலும், சித்திரை முழநிலவு நாளில் நிலவாக நின்றிருக்கும் அம்மையை காண எங்கோ சென்ற வாகனம் அங்கு திரும்பியது. கடும்பச்சை நிற பாவாடையும் சந்தன நிற சட்டையுமாக மூக்குத்தி மின்ன மின்ன நின்றிருந்தாள் குமரி அம்மை. பகவதியோ மினாட்சியோ கன்னியாவோ கன்யாவோ மரியோ மேரியோ பெண்நபியோ கவுந்தியடிகளோ உங்களுக்கு ஒவ்வொரு மனம். அவள் இந்நிலத்தின் பெருவடிவம், பெருஅரண், பெருங்கருணை, பேரழகி சிறு தெய்வம். கருங்கற்கள் கூடத்தில் அவள் காதில் ஓங்கி ஒலிக்கும் வண்ணம் உரத்து அடித்துக் கொண்டிருந்தது அலை! வெள்ளை யானை போன்ற தோற்றத்தோடு நிலவை கண்ட அலைகள் மனதின் எழுச்சி போல் கரையில் வேக வேகமாக அடித்தாலும், கரை நோக்கி காற்று வீசாமல் இருந்தது இயற்கை முரண்.  பங்குனி முழு நிலவான பங்குனி உத்திரம் கடந்து சித்திரை முழு நிலவான சித்திரை நிறைந்த சித்திரை நாள் இடையேயான 28 சந்திரநாட்களே இந்திர விழா கொண்டாடப் பட்டிருக்கிறது.  "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்" (சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதை). இந்திரன் மருதநிலத்து வேந்தன் அன்றி வேறில்லை. குமரி மண்ணின் மிகப் பழமையான இந்திரன் கோவில் சிவிந...

ஆர். பத்மநாப பிள்ளையின் ஆரைவாய்மொழி வரலாறில் இருந்து

இராணி மங்கம்மாள் ஆட்சி பொற்கால ஆட்சி என்று திரிக்கப் பட்டதா? 1943 இல் எழுதிய "ஆரைவாய்மொழி வரலாறும் மீனாட்சி சுந்தரர் ஆலய வரலாறும்" எனும் தன்னுடைய புத்தகத்தில் ஆர். பத்மநாப பிள்ளை எழுதியதை படிக்கும் போது மாலிக் கபூரின் படையெடுப்பை நினைவு படுத்துகிறது. "கொல்லம்‌ 810ஆம்‌ ஆண்டு கணியாகுளத்தில்‌ இரவிக்குட்டிப்‌ பிள்ளைப்‌ போரில்‌ பல துன்பங்கள்‌ வந்தாலும் இறுதியில்‌ நாயக்கர்‌ படை தோற்றது, திருவாங்கூர்‌ படை வெற்றிபெற்றது. திருவாங்கூரின்‌ பழைய இசாஜதானி பத்மநாபபுரம் அன்றோ. இரவிவர்மன்‌ 859 முதல்‌ 893 வரை ஆண்டான்‌, இக்காலத்தில்‌ வடுகர்படை ஆரைவாய்மொழியில்‌ வந்தது. அவ்வழி நாஞ்சில் நாட்டில் புகுந்து கல்குளம்‌ வரையிலும்‌ சென்றது. அரசன்‌ கூட்டத்தோடே படை களைக்‌ கொன்றான்‌, இத்துன்ப மொழிகளைக்‌ கேள்விப்பட்ட மகாராணி இராணிமங்கம்மாள்‌ பழிவாங்க எண்ணி நரசப்பையன்‌ தலைமையில்‌ ஓர் பெரும்‌ படையை அனுப்பலானாள்‌, நாஞ்சில் நாட்டை அழித்‌துப்‌ பெண்களின்‌ நகைகளைப்‌ பறித்தார்கள்‌, கொடும்போர்‌ நடத்தப்பட்‌டது, நாஞ்சில் நாட்டிற்கு துன்பங்கள்‌ பலநேர்ந்தன. ஆனாலும் ராணி மங்கம்மாள் அனுப்பிய நரசப்பனையும் தோற...

ஆனி ஆடி சாரல்

எப்படியும் இன்று இரவு இல்லை நாளை காலைக்குள் பிரசவம் இருக்கும்.  மேற்கே வீசுவது வளர்பருவ திருவோணபிறை. வெண்பஞ்சு மெத்தையில் கிடந்து ஒளிவீசும் புன்னகை குழந்தை போல் வீசுவது நல்ல அறிகுறி. மழலையின் சிரிப்பென பிறையும் மிக நெருக்கமானது. அருகே செவிலி போல் ஒரேயொரு வெள்ளி மட்டும் சிமிட்டிக் கிடக்கிறது. பிரகாசத்தின் சுற்றம் எப்போதும் இருண்டே கிடப்பது போல் வானமும். இரவுக் குளியலின் நீர் வெகு நாட்களுக்கு பிறகு குளிர்ந்து நிறைகிறது.  மதியம் வந்த வலி போதுமானதாக இல்லை. தொடுபிடியான வலிகள் வரவேண்டும். தேகம் தொடும் காற்றின் வெப்ப நிலை செய்தி தரும். மேற்கிலிருந்து வரும் செய்திகள் நல்லதாகவே இருக்கிறது. இப்படி நாள்கடந்து போவது எல்லோருக்கும் ஒருவித பதட்டத்தை உருவாக்கியது. தொண்டையில் இறங்கும் நீர் உவர்ப்பானதாக மாறி வெகுநாள் ஆகிவிட்டது. நிறைமாத சூலி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாள். இதற்கு மேல் சுமைகளை தாங்க முடியாது என நம்பிக்கை தளர்கிறது. வலிகளை, வேதனைகளை இறக்கி வைக்க நாளை காலைக்குள் நல்ல செய்திவரும்.  நாளை காலைக்குள் பிரசவம் நடந்துவிடும். மேற்கு தொடர்ச்சி மலை முகடுகளில் தவழ்ந்து பாலருந்...

புளிக்கறி

புளிக்கறி என்ற பெயரை நாஞ்சில் நாடு தாண்டிப் போய் சொன்னால் அது ஒரு அசைவ உணவா என்பார்கள். அண்மையில் ஒரு நண்பர் ஆட்டுக்கறியை புளி ஊற்றி செய்து புளிக்கறி என்று பெயரிட்டு பகிர்ந்து இருந்தார். ஆட்டை வெட்டுவதிலும் பெரும் பாவம் இது. மட்டனை மதிக்காமல் புளியை மதித்து பெயர் வைப்பது. புளிக்கறி என்கிற பெயர் பதின்னொன்னாம் நூற்றாண்டிலேயே புழங்கப் பட்டுள்ளதாக கல்வெட்டு தகவல்கள் கூறுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்ட கன்னியாகுமரி கல்வெட்டுகளில் இருக்கும் குறிப்பு. கன்யாபகவதி கோயில்‌ உண்ணாழியின்‌ அருகில்‌ உள்ள திருச்சுற்றின்‌ தெற்குப்‌  பக்கச்‌ சுவரில் இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டு. கல்வெட்டின் இடைப் பகுதி மட்டும் உள்ளது. கன்யாபகவதி கோயிலுக்கு மஹாநவமி யன்று தயிரமுது, நெய்யமுது ஆகியவைகள் படைப்பதற்காகக் கொடை வழங்கியதைக் குறிக்கிறது. டல் [அ]ரிசியும் நாழி நெய்யமுதும் அஞ்ஞாழித் தயிரமுதும் [புளிகறியமுதும் டு குமரிமங்கலத்து கன்னியாபடாரி யார்க்கு 2ஹஊானவமிக் [கு] படைப்ப அரிசி! நால்கலம்த்தி. வதாக இவ்வூர் உகச்சுமன் அம்மைச்சாத்தன் (வைச்ச, . உஉ, உமிர்து [அ] ஞ்ஞாழி தயிரமிர்து நாழி [நெயமிர்து...