அம்மையப்ப பிள்ளை சாருக்கு கண்ணீர் அஞ்சலி: 100 களின் கதாநாயகர் இவர். இவரிடம் கணிதம் பயின்ற யாரையும் அந்த நூறை தொடச் செய்யும் சூட்சமம் அவரிடம் உண்டு. கிரிக்கெட்டில் சச்சின் துரத்துவதை விடவும் வேகமாக ஒரு துரோணராக தன் மாணவர்களை நூற்றுக்கணக்கில் நோக்கி திருப்பும் திறமை பெற்றவர். முப்பது வருடங்ளுக்கு முன்பு இவரிடம் பத்தாம் வகுப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஆங்கிலம் கணிதம் இரண்டும் தான் பாடம். வடசேரியில் அப்போது புகழ் பெற்ற தெய்வநாத் எனும் நாட்டு மருந்துக் கடையின் மாடியில் சுண்ணாம்பு காரை அறை தான் அவர் பயிற்சி வகுப்பறை. பெல் பாட்டம் பேண்ட், வீதியான காலர், கச்சிதமான அளவில் தைக்கப்பட்ட சட்டையோடு, முறுக்கிவிடப்பட்ட மீசை, அடர்முடியோடு ஆஜானுபாகுவான தோற்றம். பூமிக்கு வலிக்காது நடந்து வரும் நடை, எதிர் கொண்டாரை நின்று பேசும் இயல்பு, அவர் வரும் முன் கொண்டாட்ட வெளியாய் இருக்கும் அறை அவர் நுழைந்ததும் கப் சிப் ஆகும், வகுப்பு முடியும் வரை உட்கார மாட்டார். ஒரு நாளிலே எழுதி அழித்து தரையெங்கும் நிறைந்து விடும் சாக்பீஸ் துகள்கள். சேட்டை பசங்களையும் நக்கல் பேர்வழிகளையும் அதிர்ந்து பேசாமலேயே வழிக்கு கொண்டு ...
கருத்துகள்
கருத்துரையிடுக