இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூந்த குளமும் அம்மையும்

மனிதனே குளிக்க மறுத்துவிட்ட சூந்தகுளத்தில் குளிக்க வைத்து தூக்கிச் செல்கின்றனர் அறம் வளர்த்த அம்மையை. சாக்கடை நறுமணம் கமழ பல்லக்கில் செல்லும் அவளுக்கு இன்று திருமணநாள். அதற்காக தாணுமூர்த்தி ஒன்றும் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடிவிடமாட்டார். அவர் குளித்து எழும் தெப்பக்குள புனிதமோ அதற்கும் மேலான ஒன்று. தண்ணீரின் நிறம் பச்சை என தெய்வத்தால் முடியாத அறிவியலால் சாத்தியமாகாத ஒன்றை மனிதன் நிரூபித்துக் காட்டியுள்ளான். குளம் புனிதம், குன்று புனிதம், கடற்கரை புனிதம் என்றதெல்லாம் கடவுளுக்கானதா? கடவுளின் பெயரால் இயற்கையை காப்பாற்றும் முன்னோர்களின் சூட்சமமா? கோயிலே கூடாது என்றவர்கள் குன்றுகளை பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வம் இருக்கின்றது என்பர்வகள் அதன் சீரழிவுக்கு தெய்வத்தை பழக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் மனிதனின் மகத்தான குணம். குமரன் இருக்கும் குன்றெல்லாம் இன்று ஓரளவேனும் மிச்சப் பிடித்து இருக்கின்றது. முருகனே மலை என்றால், வெடி வைத்து முருகனை பிளக்க மனம் வராது. அப்படியே ஒருவன் இருந்தாலும் முருகனின் பெயரால் சமூகம் அந்த மலையை காக்கும் என்று தான் ஆண்டியாய் அவனை மேலேற்றி இருக்க முடியும...

பரோட்டாக் கடை நாகரீகம்

எல்லா ஊர்களிலும் அடிக்கடி சாப்பிட்டு உள்ளேன். அந்த அனுபவத்தில் நாஞ்சில் நாடு வெஜ் சாப்பாட்டிற்கு ரொம்ப அனுக்கம் இல்லை தான். ஆனால் அசைவத்தில் அடித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு ஊரிலும் அசைவத்தில் ஒருவகை சிறப்பாக இருந்தால், இங்கே அசைவத்தின் அனைத்து வகைகளும் சிறப்பாக கிடைக்கும். பார்டர் பரோட்டா கடையை கொண்டாடுறாங்க. நம்ம ஊர் அக்கரை இறக்கத்தில் இருக்கும் மணியன்ணன் கடைக்கு ஈடாகாது அது. தேரூர் மாஸ்டர் கடை டேஸ்ட் சாப்பிட்டால் இராமநாதபுரம் பரோட்டா பிரியர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். குலசேகரன்புதூர் ஶ்ரீநிவாஸ் பரோட்டாக்கு கடையநல்லூர் பரோட்டா நெருங்க கூட முடியாது. விகேபுரம் சர்தாரில் மூனு வகை சால்னா இல்லாட்டீ பரோட்டா என்பது கேள்விக்குறி தான். சவேரியார் கோவில் Rk இல் கொத்து புரோட்டா வேறெங்கும் வாய்ப்பு இல்லை. அண்ணன் Murugesan Murugesan இன் ஒழுகினசேரி கடையில் கொத்துக்கோழி அடிச்சுக்க முடியாது. கூட சப்பாத்தியோ இடியாப்பமோ அள்ளும். வைரமாளிகையில் ஒரு நாள் சாப்பிட்டேன். நாட்டுக்கோழி நாட்டுக்கோழி அடிச்சுகிட்டாங்க. பொறிப்பு வைத்துக் கொண்டு பரோட்டா குழம்பை வைத்து திரும்பி விடுகிறார்கள். கிருஷ்ணன் கோ...

உழுந்தும் நாஞ்சில் நாடும்

உளுந்துக்கும், நாஞ்சில் நாட்டு உணவு முறைக்குமான உறவு என்பது ஒரு மருத்துவ மரபு. பெண் குழந்தை பெரியவள் ஆனது முதல், மாப்பிள்ளை சோறு கொடுத்தல், தொடர்ந்து அடியந்திர வீடுகளில் கறி சோறு கொடுப்பது வரை உளுந்தின் பயன்பாடு என்பது இன்றியமையாதது. உளுந்தஞ்சோறு என்பது ஞாயிறுகளில் இன்றும் தொடர்வது. சீரகமும், வெந்தயமும் வறுத்து வைத்து உலை தண்ணீரை கொதிக்க வைக்கும் போதே இதையும் தட்டி, கூடவே துருவி வைத்த தேங்காய் பூவும் போட்டு, கொதிக்க வைக்கின்றனர். பிறகு தனியே வறுத்த #தொலி உளுந்தையும், நன்கு கழனி பிசைந்த புழுங்கலரிசையும் சேர்த்து தேவைக்கு உப்பும் போட்டு மூடி கொதிக்க விடுகின்றனர். நன்கு கொதித்ததும் அதில், சிறிது நசுக்கி வைத்த வெள்ளை பூண்டும், சுக்கும் போட்டு கிளறி பொத்தி அமுக்கி மூடி வைக்கும் பக்குவம் நல்ல மணமுள்ளதாகவும், சுவையானதாகவும் இருக்கிறது. இதற்கு தொடுகறி அவசியம் இல்லாத அளவுக்கே இருப்பினும் இங்கு அதற்கென பெரும் வரிசையே உண்டு. திருநெல்வேலி நண்பர் ஒருவர் தயிர் ஊற்றி, எள்ளுத் துவையலோடு சாப்பிடுவார் அவரோடு சாப்பிடுகையில் அது ஒரு தனிச் சுவை தான். நாஞ்சில் நாட்டில் சைவக்காரர்கள் இதற்கு கூட்டவியல், ...

கவிதை

புன்னகைகளை கடந்து செல்வது அவ்வளவு எளிதானது அல்ல. புன்னகைகள் ஒரு கிளியின் நிறம் கொண்டு பறக்க வல்லது. புன்னகைகள் சேமிக்கப் பழகிய கூட்டினுள் சிறகு முளைத்து பறக்கின்றன புழு பூச்சிகள். சாப்பாட்டு கூடங்களில் தேனீர் விடுதிகளில் புன்னகைகள் பரிமாறப்படும் போது சுவையும் கூடுகின்றன. புன்னகைகளை தொலைத்த நவயுகன் ஒருவன் மதுக் கடை மேஜையில் அமர்ந்து புன்னகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறான். காகித கோப்பைகளில் சேமிக்கப் பட்ட மதுவில் கவர் தண்ணீரை பீச்சியடித்து குடித்து செல்லும் கொத்தனால் மட்டும் முடிகிறது தன் சட்டைப் பை நிறைய புன்னகைகளை சுமந்து செல்ல. மீள்