இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருவட்டாறு ஆதிகேசவன்.

 மீள் திருவட்டாறு ஆதிகேசவன்: இரண்டு மூன்று மணிகள் வெவ்வேறு சப்தங்களில் ஒரே நேரத்தில் ஒருதாள லயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான்  பிரகாரங்கள் சுற்றி வடக்கு பிரகாரம் உள் நுழைந்தேன். தீபாராதனைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தாகி விட்டது. மேற்கு பிரகாரம் வழி உள்ளே நுழைகையில், கதவில் செதுக்கப்பட்டிருந்த பள்ளிகொண்ட பெருமாளும் பரிவார தெய்வங்களின் தத்துரூப கலையை விட்டுவர மனமில்லாமல் வந்தேன்.  ஒரு சங்கொலியின் ஊதல் உள் இருத்தியது. பெரியவர் ஒருவர் அனாயசமாக மூச்சை இழுத்து ஊதி கொண்டிருந்தார். எந்த தெய்வம் என்று பார்த்தேன். மேலே பாலாலய ஆதிகேசவன் என்றிருந்தது. வெள்ளைச்சர மல்லிகை இத்தனை அழகாக கோர்க்க முடியுமா எனும் படி அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. ஆதிகேசவ்ன் முகம் தூரத்தில் தெரியவில்லை. சற்று நெருங்கிப் போனேன். ஆதிகேசவன் பின்னிருந்த ஒற்றை எண்ணெய் விளக்கு சுடராடி, பின்னிருந்த சுற்றடுக்கு கண்ணாடியில் அடுக்குச் சுடராய் அசைந்து கொண்டிருந்தது.  முகம் ஒருமுறை வானத்தை நோக்கி திரும்பியது. நான் நின்றிருந்த திசையில் மேலே மூலவர் கருவறையின் முகடு. மரவேலைகளால் செம்பு பொதியப்பட்ட முகடு. என...

இசை

 ஐந்து வருடங்களுக்கும் மேலாக ரிங் டோனாக வைத்திருப்பது புன்னகை மன்னன் திரைப்படத்தில், ரேவதியுடனான காதலை கமல் சொல்லுமிடத்தில் வரும் தீம் மியூசிகை தான். முதல் புளூட் முடிந்து தொடரும் கீ - போர்டு இசை தான் சரியான ஆரம்பம் ரிங் டோனுக்கு. அந்த இரண்டரை நிமிட காட்சியை எப்போதும் சிலாகித்துப் பார்த்தது உண்டு. அதில் கமலின் நடனம் என்பது இவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்து இருக்கிறாரே என்ற பிரமிப்பு தான் ஏற்பட்டு இருந்தது.  வெகு நாட்களுக்கு பிறகு இன்று காலை அந்த தீம் மியூசிக் வீடியோவை பார்க்கும் போது அந்த நடன அமைப்பு ஒட்டவே இல்லை. அல்லது என் புலன்களுக்கு அப்பால் சென்று விட்டது காட்சிப் படிமம். திரும்ப திரும்ப பார்த்தேன். எந்த விதத்திலும் ஒட்டவில்லை. ஒரு நாள் முழுவதும் ஆன பிறகும் அந்த இசையையும் காட்சியையும் சேர்த்து ஒன்ற முடியவில்லை. இசைக்கு சம்பந்தமே இல்லாத காட்சி போல உருத்தலாகவே மாறிப் போனது. அதை விட இந்த இசைக்கு பொருத்தமே இல்லாத ஓவர் டோஸ் நடனத்தை ஏன் கமல் ஆடியிருக்கிறார் என்றும், அந்த இடம் கமலின் சிறுபிள்ளை தனமாகவுமே  நினைக்க தோன்றியது. ஐந்து வருடங்களாக, அந்த இசைத் துணுக்கை யாரேனும் ஒர...

அம்மையப்ப பிள்ளை

அம்மையப்ப பிள்ளை சாருக்கு கண்ணீர் அஞ்சலி: 100 களின் கதாநாயகர் இவர். இவரிடம் கணிதம் பயின்ற யாரையும் அந்த நூறை தொடச் செய்யும் சூட்சமம் அவரிடம் உண்டு. கிரிக்கெட்டில் சச்சின் துரத்துவதை விடவும் வேகமாக ஒரு துரோணராக தன் மாணவர்களை நூற்றுக்கணக்கில் நோக்கி திருப்பும் திறமை பெற்றவர். முப்பது வருடங்ளுக்கு முன்பு இவரிடம் பத்தாம் வகுப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஆங்கிலம் கணிதம் இரண்டும் தான் பாடம். வடசேரியில் அப்போது புகழ் பெற்ற தெய்வநாத் எனும் நாட்டு மருந்துக் கடையின் மாடியில் சுண்ணாம்பு காரை அறை தான் அவர் பயிற்சி வகுப்பறை. பெல் பாட்டம் பேண்ட், வீதியான காலர், கச்சிதமான அளவில் தைக்கப்பட்ட சட்டையோடு, முறுக்கிவிடப்பட்ட மீசை, அடர்முடியோடு ஆஜானுபாகுவான தோற்றம். பூமிக்கு வலிக்காது நடந்து வரும் நடை, எதிர் கொண்டாரை நின்று பேசும் இயல்பு, அவர் வரும் முன் கொண்டாட்ட வெளியாய் இருக்கும் அறை அவர் நுழைந்ததும் கப் சிப் ஆகும், வகுப்பு முடியும் வரை உட்கார மாட்டார். ஒரு நாளிலே எழுதி அழித்து தரையெங்கும் நிறைந்து விடும் சாக்பீஸ் துகள்கள். சேட்டை பசங்களையும் நக்கல் பேர்வழிகளையும் அதிர்ந்து பேசாமலேயே வழிக்கு கொண்டு ...