இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியர் ஜீவா "காற்றில் கரைந்த திரைகள்"

 நாகர் திரையரங்குகள் குறித்த ஓர்மையை கிளறி விட்டது ஓவியர் ஜீவா அவர்களின் "காற்றில் கரைந்த திரைகள்" என்கிற கோவை திரையரங்குகள் குறித்த கட்டுரை.  "ஒற்றைத்திரை" அரங்குகள் இல்லாமல் போகுமோ என்கிற அவரின் ஆதங்கத்தில் இருந்து விரிகிறது கோவை நகரின் நூற்றாண்டு செல்லுலாய்ட் அரங்க சரித்திரம், ஒரு ரசிகனாக வரைகலை கலைஞராக விவரிக்கும் திரையரங்கு மற்றும் திரை அரங்க முதலாளிகள் குறித்த பிரமிப்பூட்டும் நினைவுகளோடு தியேட்டர் தின்பண்டங்கள் குறித்த அவர் தரும் தகவலும் நல்ல நினைவுகள் . பல கிளைகள் விரித்த சைவ உணவகம் ஒன்று கீரைவடையையும் காப்பியும் சுவைத்த தியேட்டர் கேண்டீனில் இருந்து ஆரம்பித்த வரலாறு, நடிகர் பி. எஸ். வீரப்பா தியேட்டர் முதலாளியாக வைத்திருந்தது, TKS சகோதரர்களில் நாடக அரங்கு என அரிய தகவல்கள் ஏராளம் டிலைட் தியேட்டர் உரிமையாளர் டிலைட் சேட் என்கிற ராம் சொரூப் அவரின் சித்திரம் படிக்கும் போது வரையப்பட்ட ஒரு உயரமான திரைச்சீலை போன்று காட்சிப் படுகிறது. சினிமா குறித்து இல்லாமல் பேசு பொருளை கட்சிதமாக உள்ளடக்கிய கட்டுரை. அருமை அண்ணாச்சி.  கோவை திரையரங்குகளில்  கோவையில் வாழ்ந்த மூன்று மாத அ...

மட்டி புவிசார்

 மட்டிப் பழத்திற்கு புவிசார் குறியீடு. மட்டிப் பழம் எங்கள் ஊர் பூலான்செண்டு தானே என பலர் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டியை தொடர்ந்து உண்டிருந்தால் பூலான் செண்டு ஒரு பழமாகவே எண்ணி இருக்க மாட்டார்கள். பலருக்கு கதலி மற்றும் ரஸ்தாளி என்கிற நினைப்பிலே இருக்கின்றனர்.  மட்டி கனிய விட்டுத் தின்பதிலே தான் சுவை அதிகம். கனிய கனிய தேனாகும். தேனீக்கள் உதவியற்று தேன் சேகரித்து வைக்கும் பழம் இது. அதற்கு நன்கு கனிய விடணும். ரசக்கதலி காயோடு உரித்தாலும் தொலியில் பழம் ஒட்டாது. சிறுவர்களின் குஞ்சுமணி வடிவொத்த பழம் காதலியும் மட்டியும். "மட்டிப்பழம் பத்திரம் மக்ளே காக்கை தின்னுறாம" என்று தாத்தாக்கள் மாமாக்கள் அசைக்கும் போது பாடி பவுண்டரி தாண்டி சிக்சருக்கு பறக்கும் பந்துகள் பால்ய அத்துமீறலை நிகழ்த்தி விடவில்லை.  மெல்லிசான தோல், வளைந்த வடிவம், நீண்ட நுனிக்காம்பு ஒரு சீப்பில் குறுகுறு என எண்ணற்ற காய்கள். ஒரு சீப்பை கொண்டு வைத்தாலும் திரும்பிப் பார்க்கும் முன் தின்று விட்டு அடுத்து என்று கேள்வியோடு பார்ப்பான் சின்னவன். முன் பழத்தொலியை குவித்து வைத்து இருப்பான். எவ்வளவு தின்றாலும் பயம் இல்லை....